Friday, December 7, 2012

பொய்க்கால்

பள்ளிக்கூடத்தில் பம்பலாக பார்த்தவை தவிர்த்து, நான் முதன் முதலில் பார்த்த மேடை நாடகம் அதுதான். முகத்திலடிக்கும் உண்மையையும் அடக்கமுடியாதபடி சிரிப்பையும், திரு மருகையன் அவர்கள் எழுதி திரு சிதம்பரநாதன் அவர்கள் இயக்கிய அந்த நாடகம் தந்தது.

ஊர் பெரியவரான பொய்க்கால் தாத்தா, அவர் அணிந்திருக்கும் உயரமான பொய்க்கால், சின்னராசு, சின்னராசை லவ் பண்ணும் பெண், கூடத்திரியிற பெடியள் எண்டு ஒவ்வொரு பாத்திரத்திலும் உயிர். கண்ணன் மாஸ்டரிண்ட இசையில் பாட்டுகளுக்கு அவை ஆடின ஆட்டமும் அட்டகாசம். அந்த நாட்களின் குண்டு வீச்சுக்களுக்குள்ளயும், அட இப்பிடி ஒர் உலகம் இருக்கு எனக்கு புரிய வைத்ததும், என்னை மிகவும் பாதித்த முதல் மேடை நாடகமும் "பொய்க்கால்" தான்.

பொய்க்கால் தாத்தாவின் அறிமுகமே தனி, சின்னராசுவின் நளினங்களில் நாங்கள் லயித்திருக்கும் போது குமாரசாமி மண்டபத்தில் பார்வையாளர்களின் பின்னால் இருந்து வந்து நாடகத்துள் நுழைந்து கொண்டார். ”என்ன சின்னராசு, பாட்டெல்லாம் பாடுறியாம், ஆட்டங்கள் போடுறியாம்” என்றவுடன் டான்ஸ் எல்லாம் நிண்டுபோச்சு. இதுதான் கதையின் பொய்க்கால் எண்டு - எல்லாம் விளங்கின மாதிரி - வழமை போல - நானும் நினைத்தேன். ஆனால் அதுவல்ல கரு. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் உள்ளுரில் விலாசம் காட்டுபவர்களின் கால்தான் - பொய்க்காலின் கரு.

இதற்குள் சின்னராசு + நண்பர்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிவப்புத் துணியை காப்பாற்ற அதை இழுக்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் விட்டு விட்டு போக, சின்னராசு தனித்து நிற்கிறான் - இழுக்கிறான். புரிய வேண்டியவர்கள் சிவப்புத் துணியை புரிந்து கொள்ளுங்கள்.

ஊரின் உண்மைகளை அட்டகாசமான திரைக்கதையோடு இருக்கிற வளங்களை வைத்துக் கொண்டு நடித்துக் காட்டினார்கள் - நடந்து காட்டினார்கள் பொய்க்காலில்.

Tuesday, October 23, 2012

என் கண்மணித்தாமரை

மீனா அல்லது ரம்யா கிருஷ்ணன் காதிலிருந்து, மெல்ல நழுவி மெதுவாய் கன்னத்தை உரசியபடி கிழே விழுந்து, இரண்டோ மூன்றோ முறை எகிறிக் குதித்து, விறு விறுவென வாசலை நோக்கி ஓடி வெளியே வந்து, ஒரே பாய்ச்சலாய் விண்ணுக்கு பாய்ந்து, அங்கும் சில-பல குட்டிக் கரணங்கள் அடித்த பின் நட்ட நடுவானில் ஒளி உமிழ்வதெல்லாம் கிறபிக்ஸ் “தோடு“ தான்.

இதற்கிடையில் குளோசப்பில் கண்களாலும் உதடுகளாலும் அம்மன் குறைந்தது மூன்று முறையாவது சிரித்திருப்பார், படத்திலுள்ள பக்தர்களேடு நாமும் பரவசப்படும்படியாக காட்சி முழக்கப்படும். இது 3D இல் வந்தால் இன்னும் விஷேசம்.

ஆனால் நிஜத்தில் அப்படியா இருக்கும்?

அம்மன்

"கிட்டத்தட்ட ஒன்பதாவது பாட்டு முடிகின்ற நேரம் சட்டென ஓர் மின்னல் கீற்று மூலஸ்தானத்திற்குப் பக்கமாய் பளிச்சிட்டதை, அம்மாவின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்த அபிநயா, கிழே எரிந்து கொண்டிருந்த நெருப்பு, ஓடி விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியையும் சேர்த்து வந்திருந்த எல்லா ஏழை - பணக்காரரும் பார்த்தார்கள், இல்லை உணர்ந்தார்கள் என்பதே சரியாய் இருக்கும்.

என்ன அது என்று சுதாரித்துக் கொள்வதற்குள்; பின் வானில் அத்தனை வெளிச்சம், ஒரு UFO.
இல்லை நிலா,
நிலாவே தான்.

அந்த அடர்ந்த அமாவாசையில் ஓர் பௌர்ணமி நிலா.

அம்மனைப் போய் கிட்டப் பார்த்தால் தோட்டைக் காணோம்"


கிட்டத்தட்ட இப்படித்தான் “என் கண்மணித்தாமரை“ கதையும் முடிகிறது.

என் கண்மணி தாமரை
என் கண்மணி தாமரை

பிறகு ஒரு பின் குறிப்பு - பின் நாட்களில் so-and-so பலராலும் ”அபிராமிப்பட்டர்” என்று அழைக்கப்பட்டார்.

ஆக, கதை சொல்லும் பாங்கால் “என் கண்மணித்தாமரை“ யும் நான் பாலகுமாரனை ரசிப்பதற்கு மேலும் ஒரு காரணமாகிறது.

Thursday, May 17, 2012

எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு

உலகில் பரவலாக பேசப்படும் மொழியை நாம் இலகுவில் கற்றுக் கொள்கிறேம். தமிழில் தான் நீங்கள் கதைக்க வேண்டும் என்றால் யாரும் கதைக்கப் போவதில்லை. ஆங்கில மோகம் என்கிறார்கள்,
உண்மையில் இது அமேரிக்க மோகம்.

மொழி ஒரு கருவி அவ்வளவதான். எல்லோருக்கும் அவரவர் தாய் மொழிதான் முதல் மொழி, அதன் பிறகுதான் மற்றயவை.

“காதல்“ எங்கிறதை என்னமோ கெட்ட வார்த்தைன்னு ஆக்கீட்டாங்க
I love you ன்னு தான் சொல்றாங்க,  எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு. - கமல் 




Thursday, May 10, 2012

மோத்திரக் கல்


‘ஒரு மாதிரியாக வெளியில வந்திற்று’

பத்து மாதம் பக்குவமாய் சுமந்து பெற்றதைப் போல பூரிப்புடன் வாசலில் நின்று கொண்டிருந்த லசந்தவின் கையில் சிறிய காகிதத் துண்டின் மேல் இருந்தது அது.

டேவிட் அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, நான் ஏனோ நானாகவே மூக்கை நுழைத்துக் கொண்டேன்.

‘என்ன இது’ - நான்

”Calcium Oxalate - கல்சியம் ஒக்ஸ்சலேட் - நீர் ஏஎல்ல என்ன பாடம் செய்த நீர்? நான் பயோ, சோலஜி B மற்ற தெல்லாம் S. பிறகு தான் ITக்கு வந்தனான். விளங்கிற மாதிரி சொன்னா - மூத்திரக் கல்.”

மூக்கை நுழைத்ததற்கு வருந்திக் கொண்டாலும், முகர்ந்து பார்க்காததற்கு மகிழ்ந்து கொண்டேன்.

சரி எப்படிக் கண்டு பிடித்தாய்?

நிண்டு கொண்டு ‘இருக்கேக்க’ - உள்ளுக்குள்ள இருந்து கல்லு வெளியில வரும் உணர்வு தெரியும் - டக்கெண்டு கைதுடைக்கிற பேப்பற போட்டு..

"அட நான் அதைக் கேட்கவில்லை, இது மூத்திரக் கல் தான் என எப்படித் தெரியும்?"

'இது நாலாவது முறை மச்சான் (சிங்களவருக்கும் நமீதாவிற்கும் முதலில் தெரியும் தமில் சொல் மச்சான் தான்) போன முறை கலியான வீட்டுக்கு நாலு நாளைக்கு முதல் வந்தது, 0.6 mm . இது இன்னமும் பெரிசு போல' என்றான் லசந்த கல்லை உற்றுப் பார்த்தவாறே.

நல்ல வேளை, அது முன்னதாகவே வெளியேறி விட்டது. இல்லாட்டி நங்கி பாவம் என நான் நினைத்துக் கொண்டேன்.

தண்ணி நிறையக் குடிக்கோணும்.. அதுதான் இதுக்கு நல்ல மருந்து. அப்பா ஆமில பெரிய உத்தியோகத்தில இருந்தவர், அவருக்கும் இது வந்தது.

மச்சான்  இது வெளியே வாறது, பிள்ளை பெறுவதைப் போன்றது - அவ்வளவு வேதனையாக இருக்கும், என்று லசந்த சொல்லி முடிக்கவும் அவன் செல்போன் சிணுங்கவும் சரியாயிருந்தது. கதைத்து முடித்ததும் சந்தோசமாய் தனது வேலை உறுதி செய்யப்பட்டதாய் சொன்னான்.

எல்லாம் கல் வந்த ராசி தான், உன் மோதிரத்தில் பதித்துக்கொள் இன்னம் சிறப்பாய் இருக்கும் என்று சொன்னேன். அப்படியா..? என்றானே ஆயிரம் வோல்ட் பல்ப்போடு.

Monday, May 7, 2012

பறகா




பிறேசில் பழங்குடி சிறுமி ஒருத்தி இலைகளை விலக்கிக் கொண்டு செடி கொடிகளினுடே எட்டிப் பார்க்கிறாள். இப்படியான அட்டைப் படத்தோடு தான் முதன்முதலில் நான் பறகாவை கவனித்தேன். இது ஓர் தென்னமெரிக்க காட்டுவாசிகளின் கதையாக இருக்கக் கூடும் என எண்ணியவாறு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

யப்பானில் குரங்குகள் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருக்கின்றன. சீன சனநெரிசல்களில் அதிவேக ரயில்கள் சிக்கித் தவிக்கின்றன. நியுயோர்க் பாதை விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, மக்காவின் கோபுரங்கள் வெளிச்சக்கீற்று தாக்கி அழகொழுகிக் கொண்டிருந்தன.

இன்னும்