Friday, December 7, 2012

பொய்க்கால்

பள்ளிக்கூடத்தில் பம்பலாக பார்த்தவை தவிர்த்து, நான் முதன் முதலில் பார்த்த மேடை நாடகம் அதுதான். முகத்திலடிக்கும் உண்மையையும் அடக்கமுடியாதபடி சிரிப்பையும், திரு மருகையன் அவர்கள் எழுதி திரு சிதம்பரநாதன் அவர்கள் இயக்கிய அந்த நாடகம் தந்தது.

ஊர் பெரியவரான பொய்க்கால் தாத்தா, அவர் அணிந்திருக்கும் உயரமான பொய்க்கால், சின்னராசு, சின்னராசை லவ் பண்ணும் பெண், கூடத்திரியிற பெடியள் எண்டு ஒவ்வொரு பாத்திரத்திலும் உயிர். கண்ணன் மாஸ்டரிண்ட இசையில் பாட்டுகளுக்கு அவை ஆடின ஆட்டமும் அட்டகாசம். அந்த நாட்களின் குண்டு வீச்சுக்களுக்குள்ளயும், அட இப்பிடி ஒர் உலகம் இருக்கு எனக்கு புரிய வைத்ததும், என்னை மிகவும் பாதித்த முதல் மேடை நாடகமும் "பொய்க்கால்" தான்.

பொய்க்கால் தாத்தாவின் அறிமுகமே தனி, சின்னராசுவின் நளினங்களில் நாங்கள் லயித்திருக்கும் போது குமாரசாமி மண்டபத்தில் பார்வையாளர்களின் பின்னால் இருந்து வந்து நாடகத்துள் நுழைந்து கொண்டார். ”என்ன சின்னராசு, பாட்டெல்லாம் பாடுறியாம், ஆட்டங்கள் போடுறியாம்” என்றவுடன் டான்ஸ் எல்லாம் நிண்டுபோச்சு. இதுதான் கதையின் பொய்க்கால் எண்டு - எல்லாம் விளங்கின மாதிரி - வழமை போல - நானும் நினைத்தேன். ஆனால் அதுவல்ல கரு. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் உள்ளுரில் விலாசம் காட்டுபவர்களின் கால்தான் - பொய்க்காலின் கரு.

இதற்குள் சின்னராசு + நண்பர்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிவப்புத் துணியை காப்பாற்ற அதை இழுக்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் விட்டு விட்டு போக, சின்னராசு தனித்து நிற்கிறான் - இழுக்கிறான். புரிய வேண்டியவர்கள் சிவப்புத் துணியை புரிந்து கொள்ளுங்கள்.

ஊரின் உண்மைகளை அட்டகாசமான திரைக்கதையோடு இருக்கிற வளங்களை வைத்துக் கொண்டு நடித்துக் காட்டினார்கள் - நடந்து காட்டினார்கள் பொய்க்காலில்.

இன்னும்