Friday, December 7, 2012

பொய்க்கால்

பள்ளிக்கூடத்தில் பம்பலாக பார்த்தவை தவிர்த்து, நான் முதன் முதலில் பார்த்த மேடை நாடகம் அதுதான். முகத்திலடிக்கும் உண்மையையும் அடக்கமுடியாதபடி சிரிப்பையும், திரு மருகையன் அவர்கள் எழுதி திரு சிதம்பரநாதன் அவர்கள் இயக்கிய அந்த நாடகம் தந்தது.

ஊர் பெரியவரான பொய்க்கால் தாத்தா, அவர் அணிந்திருக்கும் உயரமான பொய்க்கால், சின்னராசு, சின்னராசை லவ் பண்ணும் பெண், கூடத்திரியிற பெடியள் எண்டு ஒவ்வொரு பாத்திரத்திலும் உயிர். கண்ணன் மாஸ்டரிண்ட இசையில் பாட்டுகளுக்கு அவை ஆடின ஆட்டமும் அட்டகாசம். அந்த நாட்களின் குண்டு வீச்சுக்களுக்குள்ளயும், அட இப்பிடி ஒர் உலகம் இருக்கு எனக்கு புரிய வைத்ததும், என்னை மிகவும் பாதித்த முதல் மேடை நாடகமும் "பொய்க்கால்" தான்.

பொய்க்கால் தாத்தாவின் அறிமுகமே தனி, சின்னராசுவின் நளினங்களில் நாங்கள் லயித்திருக்கும் போது குமாரசாமி மண்டபத்தில் பார்வையாளர்களின் பின்னால் இருந்து வந்து நாடகத்துள் நுழைந்து கொண்டார். ”என்ன சின்னராசு, பாட்டெல்லாம் பாடுறியாம், ஆட்டங்கள் போடுறியாம்” என்றவுடன் டான்ஸ் எல்லாம் நிண்டுபோச்சு. இதுதான் கதையின் பொய்க்கால் எண்டு - எல்லாம் விளங்கின மாதிரி - வழமை போல - நானும் நினைத்தேன். ஆனால் அதுவல்ல கரு. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் உள்ளுரில் விலாசம் காட்டுபவர்களின் கால்தான் - பொய்க்காலின் கரு.

இதற்குள் சின்னராசு + நண்பர்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிவப்புத் துணியை காப்பாற்ற அதை இழுக்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் விட்டு விட்டு போக, சின்னராசு தனித்து நிற்கிறான் - இழுக்கிறான். புரிய வேண்டியவர்கள் சிவப்புத் துணியை புரிந்து கொள்ளுங்கள்.

ஊரின் உண்மைகளை அட்டகாசமான திரைக்கதையோடு இருக்கிற வளங்களை வைத்துக் கொண்டு நடித்துக் காட்டினார்கள் - நடந்து காட்டினார்கள் பொய்க்காலில்.

Tuesday, October 23, 2012

என் கண்மணித்தாமரை

மீனா அல்லது ரம்யா கிருஷ்ணன் காதிலிருந்து, மெல்ல நழுவி மெதுவாய் கன்னத்தை உரசியபடி கிழே விழுந்து, இரண்டோ மூன்றோ முறை எகிறிக் குதித்து, விறு விறுவென வாசலை நோக்கி ஓடி வெளியே வந்து, ஒரே பாய்ச்சலாய் விண்ணுக்கு பாய்ந்து, அங்கும் சில-பல குட்டிக் கரணங்கள் அடித்த பின் நட்ட நடுவானில் ஒளி உமிழ்வதெல்லாம் கிறபிக்ஸ் “தோடு“ தான்.

இதற்கிடையில் குளோசப்பில் கண்களாலும் உதடுகளாலும் அம்மன் குறைந்தது மூன்று முறையாவது சிரித்திருப்பார், படத்திலுள்ள பக்தர்களேடு நாமும் பரவசப்படும்படியாக காட்சி முழக்கப்படும். இது 3D இல் வந்தால் இன்னும் விஷேசம்.

ஆனால் நிஜத்தில் அப்படியா இருக்கும்?

அம்மன்

"கிட்டத்தட்ட ஒன்பதாவது பாட்டு முடிகின்ற நேரம் சட்டென ஓர் மின்னல் கீற்று மூலஸ்தானத்திற்குப் பக்கமாய் பளிச்சிட்டதை, அம்மாவின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்த அபிநயா, கிழே எரிந்து கொண்டிருந்த நெருப்பு, ஓடி விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியையும் சேர்த்து வந்திருந்த எல்லா ஏழை - பணக்காரரும் பார்த்தார்கள், இல்லை உணர்ந்தார்கள் என்பதே சரியாய் இருக்கும்.

என்ன அது என்று சுதாரித்துக் கொள்வதற்குள்; பின் வானில் அத்தனை வெளிச்சம், ஒரு UFO.
இல்லை நிலா,
நிலாவே தான்.

அந்த அடர்ந்த அமாவாசையில் ஓர் பௌர்ணமி நிலா.

அம்மனைப் போய் கிட்டப் பார்த்தால் தோட்டைக் காணோம்"


கிட்டத்தட்ட இப்படித்தான் “என் கண்மணித்தாமரை“ கதையும் முடிகிறது.

என் கண்மணி தாமரை
என் கண்மணி தாமரை

பிறகு ஒரு பின் குறிப்பு - பின் நாட்களில் so-and-so பலராலும் ”அபிராமிப்பட்டர்” என்று அழைக்கப்பட்டார்.

ஆக, கதை சொல்லும் பாங்கால் “என் கண்மணித்தாமரை“ யும் நான் பாலகுமாரனை ரசிப்பதற்கு மேலும் ஒரு காரணமாகிறது.

Thursday, May 17, 2012

எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு

உலகில் பரவலாக பேசப்படும் மொழியை நாம் இலகுவில் கற்றுக் கொள்கிறேம். தமிழில் தான் நீங்கள் கதைக்க வேண்டும் என்றால் யாரும் கதைக்கப் போவதில்லை. ஆங்கில மோகம் என்கிறார்கள்,
உண்மையில் இது அமேரிக்க மோகம்.

மொழி ஒரு கருவி அவ்வளவதான். எல்லோருக்கும் அவரவர் தாய் மொழிதான் முதல் மொழி, அதன் பிறகுதான் மற்றயவை.

“காதல்“ எங்கிறதை என்னமோ கெட்ட வார்த்தைன்னு ஆக்கீட்டாங்க
I love you ன்னு தான் சொல்றாங்க,  எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு. - கமல் 




Thursday, May 10, 2012

மோத்திரக் கல்


‘ஒரு மாதிரியாக வெளியில வந்திற்று’

பத்து மாதம் பக்குவமாய் சுமந்து பெற்றதைப் போல பூரிப்புடன் வாசலில் நின்று கொண்டிருந்த லசந்தவின் கையில் சிறிய காகிதத் துண்டின் மேல் இருந்தது அது.

டேவிட் அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, நான் ஏனோ நானாகவே மூக்கை நுழைத்துக் கொண்டேன்.

‘என்ன இது’ - நான்

”Calcium Oxalate - கல்சியம் ஒக்ஸ்சலேட் - நீர் ஏஎல்ல என்ன பாடம் செய்த நீர்? நான் பயோ, சோலஜி B மற்ற தெல்லாம் S. பிறகு தான் ITக்கு வந்தனான். விளங்கிற மாதிரி சொன்னா - மூத்திரக் கல்.”

மூக்கை நுழைத்ததற்கு வருந்திக் கொண்டாலும், முகர்ந்து பார்க்காததற்கு மகிழ்ந்து கொண்டேன்.

சரி எப்படிக் கண்டு பிடித்தாய்?

நிண்டு கொண்டு ‘இருக்கேக்க’ - உள்ளுக்குள்ள இருந்து கல்லு வெளியில வரும் உணர்வு தெரியும் - டக்கெண்டு கைதுடைக்கிற பேப்பற போட்டு..

"அட நான் அதைக் கேட்கவில்லை, இது மூத்திரக் கல் தான் என எப்படித் தெரியும்?"

'இது நாலாவது முறை மச்சான் (சிங்களவருக்கும் நமீதாவிற்கும் முதலில் தெரியும் தமில் சொல் மச்சான் தான்) போன முறை கலியான வீட்டுக்கு நாலு நாளைக்கு முதல் வந்தது, 0.6 mm . இது இன்னமும் பெரிசு போல' என்றான் லசந்த கல்லை உற்றுப் பார்த்தவாறே.

நல்ல வேளை, அது முன்னதாகவே வெளியேறி விட்டது. இல்லாட்டி நங்கி பாவம் என நான் நினைத்துக் கொண்டேன்.

தண்ணி நிறையக் குடிக்கோணும்.. அதுதான் இதுக்கு நல்ல மருந்து. அப்பா ஆமில பெரிய உத்தியோகத்தில இருந்தவர், அவருக்கும் இது வந்தது.

மச்சான்  இது வெளியே வாறது, பிள்ளை பெறுவதைப் போன்றது - அவ்வளவு வேதனையாக இருக்கும், என்று லசந்த சொல்லி முடிக்கவும் அவன் செல்போன் சிணுங்கவும் சரியாயிருந்தது. கதைத்து முடித்ததும் சந்தோசமாய் தனது வேலை உறுதி செய்யப்பட்டதாய் சொன்னான்.

எல்லாம் கல் வந்த ராசி தான், உன் மோதிரத்தில் பதித்துக்கொள் இன்னம் சிறப்பாய் இருக்கும் என்று சொன்னேன். அப்படியா..? என்றானே ஆயிரம் வோல்ட் பல்ப்போடு.

Monday, May 7, 2012

பறகா




பிறேசில் பழங்குடி சிறுமி ஒருத்தி இலைகளை விலக்கிக் கொண்டு செடி கொடிகளினுடே எட்டிப் பார்க்கிறாள். இப்படியான அட்டைப் படத்தோடு தான் முதன்முதலில் நான் பறகாவை கவனித்தேன். இது ஓர் தென்னமெரிக்க காட்டுவாசிகளின் கதையாக இருக்கக் கூடும் என எண்ணியவாறு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

யப்பானில் குரங்குகள் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருக்கின்றன. சீன சனநெரிசல்களில் அதிவேக ரயில்கள் சிக்கித் தவிக்கின்றன. நியுயோர்க் பாதை விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, மக்காவின் கோபுரங்கள் வெளிச்சக்கீற்று தாக்கி அழகொழுகிக் கொண்டிருந்தன.

Saturday, March 31, 2012

யாழ் கொலவெறி எதிர்ப்பலை


தனுஷின் கொலவெறி பற்றி பலர் பேசிக் கொண்டிருக்க, "எந்தவொரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இல்லாதது 'ஒய்திஸ் கொலவெறி டி...' பாடலாகத்தான் இருக்க முடியும்." என மொழி ஆர்வலர்கள், உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்து இந்தப் பாடல்.

“தமிழ்மொழியை இழிவுபடுத்தும் இந்தப் பாடல் இடம்பெரும் படத்தை மானமுள்ள எந்த தமிழனும் பார்க்கக் கூடாது” என்றெல்லாம் அறிக்கை விட்டார்கள். நேற்று 3 படமும் வெளியாகிவிட்டது. விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.

"தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறி பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்." என இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பியான அஸ்வர் பேசினார்.


Friday, March 30, 2012

கொலவெறி கொலைக்க்ஷன்




தனுசின்  ‘சூப்’ பாடல் ஒலக பிரசித்தி பெற்றமை எல்லாம் பழைய செய்தி. ஆனால் அதன் பாதிப்பில் உருவான படைப்புகள், வீடியோக்கள் பல அதற்கு நிகராயிருந்தன.  கொலவெறி பாடலுக்கு பதிலாகவும் பல படைப்புகள் வந்திருந்தாலும், சில மட்டுமே சொல்லும் படியாக இருந்தன.
நான் சிலவற்றை இங்கு சேர்த்திருக்கிறேன்.


Saturday, March 24, 2012

இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்

1930ஆம் ஆண்டு இலங்கையின் வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டி தமிழர்கள் சென்ற போது, ”இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்” என ‘போஸ்டன் குளோப்’ செய்தி வெளியிட்டிருந்தது.


வ.உ சிதம்பரம்பிள்ளை மட்டுமல்ல வல்வை மக்களும் அமெரிக்காவிற்கு கப்பலோட்டினார்கள். வல்வை சுந்தரமேஸ்திரியார் என்பவரால் நேர்த்தியாக அமைக்கப்பட்ட இரட்டைப் பாய்மரக் கப்பல் கிட்டத்தட்ட 82 ஆண்டுகளுக்கு முன் வல்வையில் இருந்து குளோஸ்ரர் துறைமுகம் வரை சிறப்பாக சென்றடைந்தது.

Thursday, January 26, 2012

இஸ்லாமிய பெண்களின் முகத்திரைகள்

இப் பதிவு இஸ்லாமிய பெண்கள் ஏன் முகத்திரை அணிய வேண்டும் அல்லது ஏன் அணியக்கூடாது என்பது பற்றி அல்ல. அல்லது அவர்களின் முகத்திரை பற்றிய என் பார்வையும் அல்ல.

இஸ்லாமிய பெண்களின் முகத்திரைகள்

பொதுவாக மலேசியாவில் தலையை மட்டும் முடியவாறு தான் பெண்களைக் காணலாம். இத்தனைக்கும் மலேசியா முழுமையான இஸ்லாமிய நாடு. முகத்திரை அணிந்த இஸ்லாமிய பெண்களை நான் காணவே இல்லை எனலாம். ”அக்கா” என்றழைக்க எல்லோருமே பண்பாய் பழகுவார்கள். அக்கா, மலாய் மொழியில் சகோதரி என்று மட்டுமல்லாது பொதுவாக பெண்களைக்கும் சொல் - தோழி என்று வைத்துக் கொள்ளலாம்.


Monday, January 2, 2012

காதலை சொல்வதற்கு ஆயிரம் வழி - 001

வானைத் தொடுமளவிற்கு காதல் இருக்கும்.
எகிறி குதித்தால் வானம் இடிக்கும்.
இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்
காதலை சொல்வதற்கு ஆயிரம் வழியும் இருக்கும். .

முதன் முதலாய் அவன் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன்.

இது ஆண்டின் முதல் நாள்
அது விமானிக்கு முழு நாள்

சிட்னி வானில்
சிட்டாய் பறந்தது
சிறிய விமானம்

சிட்டுக் குருவியாய்
வட்டமிட்டு விரைந்து
கீறியது வானில்

எலீனா, என்னோடு இரு 




யார் அந்த லுசுப் பெண் - எலீனா..


இன்னும்