Monday, March 4, 2019

வீரமணி ஐயர்


அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை இருந்தது. அவரின் சொல், இசை ஆளுமை பற்றி பலமுறை அப்பா சொல்லி இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் யார் என்று எனக்குத் தொியாது.

அது 80களின் இறுதியாக இருக்க வேண்டும், என் சங்கீத ஆசிரியையின் வற்புறுத்தலின் பேரில் “பாரதி கான சபா” சென்றிருந்தேன். இவா் வரக்கூடும்.

ஆண்டு விழா. சபா மண்டபம் நிறைய ஆட்கள். நடுவில் சரஸ்வதி, கொஞ்சம் இடம், பிறகு முரளியும் நானும்.

இவர் வரும்வரைக்கும் கீர்த்தனைகள் தான். கொஞ்சம் பிந்தித்தான் வந்தார் என்று நினைக்கிறேன். கடகடவென உள்ளே வந்தவர் எனதருகில் உட்கார, எனதும் அவரதும் முழங்கால்கள் முட்டிக் கொண்டன. ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். அசீவாதமாக கூட இருக்கலாம்.

சபாவிற்காக பாடல் இயற்றக் கேட்டுக் கொண்டார்கள். அங்கு ஆரம்பித்தது வித்தை. சரஸ்வதி நாக்கில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நேராகப் பார்த்தேன். அப்படி ஒரு பிரவாகம் - சொல்லிலும் சரி மெட்டிலும் சரி. ஒன்றுக்கு நான்கு கீர்த்தனைகளை கொட்டினார். பக்கத்திலிருந்த சபாக்காறர் எழுத திணறினார்.

வேலை முடிந்தது வாழ்த்தினர் வணக்க்கினர் விடைபெற்றார்.

கலை சிலருக்கு வரம், அச்சிலர் சமூகத்தின் வரம்.

குக்கூ வின் இந்த இசை ஆவணத்தை headphone இல் இறுதிவரை கேட்கவும்.. it will transport you.


இன்னும்