Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, October 23, 2012

என் கண்மணித்தாமரை

மீனா அல்லது ரம்யா கிருஷ்ணன் காதிலிருந்து, மெல்ல நழுவி மெதுவாய் கன்னத்தை உரசியபடி கிழே விழுந்து, இரண்டோ மூன்றோ முறை எகிறிக் குதித்து, விறு விறுவென வாசலை நோக்கி ஓடி வெளியே வந்து, ஒரே பாய்ச்சலாய் விண்ணுக்கு பாய்ந்து, அங்கும் சில-பல குட்டிக் கரணங்கள் அடித்த பின் நட்ட நடுவானில் ஒளி உமிழ்வதெல்லாம் கிறபிக்ஸ் “தோடு“ தான்.

இதற்கிடையில் குளோசப்பில் கண்களாலும் உதடுகளாலும் அம்மன் குறைந்தது மூன்று முறையாவது சிரித்திருப்பார், படத்திலுள்ள பக்தர்களேடு நாமும் பரவசப்படும்படியாக காட்சி முழக்கப்படும். இது 3D இல் வந்தால் இன்னும் விஷேசம்.

ஆனால் நிஜத்தில் அப்படியா இருக்கும்?

அம்மன்

"கிட்டத்தட்ட ஒன்பதாவது பாட்டு முடிகின்ற நேரம் சட்டென ஓர் மின்னல் கீற்று மூலஸ்தானத்திற்குப் பக்கமாய் பளிச்சிட்டதை, அம்மாவின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்த அபிநயா, கிழே எரிந்து கொண்டிருந்த நெருப்பு, ஓடி விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியையும் சேர்த்து வந்திருந்த எல்லா ஏழை - பணக்காரரும் பார்த்தார்கள், இல்லை உணர்ந்தார்கள் என்பதே சரியாய் இருக்கும்.

என்ன அது என்று சுதாரித்துக் கொள்வதற்குள்; பின் வானில் அத்தனை வெளிச்சம், ஒரு UFO.
இல்லை நிலா,
நிலாவே தான்.

அந்த அடர்ந்த அமாவாசையில் ஓர் பௌர்ணமி நிலா.

அம்மனைப் போய் கிட்டப் பார்த்தால் தோட்டைக் காணோம்"


கிட்டத்தட்ட இப்படித்தான் “என் கண்மணித்தாமரை“ கதையும் முடிகிறது.

என் கண்மணி தாமரை
என் கண்மணி தாமரை

பிறகு ஒரு பின் குறிப்பு - பின் நாட்களில் so-and-so பலராலும் ”அபிராமிப்பட்டர்” என்று அழைக்கப்பட்டார்.

ஆக, கதை சொல்லும் பாங்கால் “என் கண்மணித்தாமரை“ யும் நான் பாலகுமாரனை ரசிப்பதற்கு மேலும் ஒரு காரணமாகிறது.

Thursday, May 10, 2012

மோத்திரக் கல்


‘ஒரு மாதிரியாக வெளியில வந்திற்று’

பத்து மாதம் பக்குவமாய் சுமந்து பெற்றதைப் போல பூரிப்புடன் வாசலில் நின்று கொண்டிருந்த லசந்தவின் கையில் சிறிய காகிதத் துண்டின் மேல் இருந்தது அது.

டேவிட் அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, நான் ஏனோ நானாகவே மூக்கை நுழைத்துக் கொண்டேன்.

‘என்ன இது’ - நான்

”Calcium Oxalate - கல்சியம் ஒக்ஸ்சலேட் - நீர் ஏஎல்ல என்ன பாடம் செய்த நீர்? நான் பயோ, சோலஜி B மற்ற தெல்லாம் S. பிறகு தான் ITக்கு வந்தனான். விளங்கிற மாதிரி சொன்னா - மூத்திரக் கல்.”

மூக்கை நுழைத்ததற்கு வருந்திக் கொண்டாலும், முகர்ந்து பார்க்காததற்கு மகிழ்ந்து கொண்டேன்.

சரி எப்படிக் கண்டு பிடித்தாய்?

நிண்டு கொண்டு ‘இருக்கேக்க’ - உள்ளுக்குள்ள இருந்து கல்லு வெளியில வரும் உணர்வு தெரியும் - டக்கெண்டு கைதுடைக்கிற பேப்பற போட்டு..

"அட நான் அதைக் கேட்கவில்லை, இது மூத்திரக் கல் தான் என எப்படித் தெரியும்?"

'இது நாலாவது முறை மச்சான் (சிங்களவருக்கும் நமீதாவிற்கும் முதலில் தெரியும் தமில் சொல் மச்சான் தான்) போன முறை கலியான வீட்டுக்கு நாலு நாளைக்கு முதல் வந்தது, 0.6 mm . இது இன்னமும் பெரிசு போல' என்றான் லசந்த கல்லை உற்றுப் பார்த்தவாறே.

நல்ல வேளை, அது முன்னதாகவே வெளியேறி விட்டது. இல்லாட்டி நங்கி பாவம் என நான் நினைத்துக் கொண்டேன்.

தண்ணி நிறையக் குடிக்கோணும்.. அதுதான் இதுக்கு நல்ல மருந்து. அப்பா ஆமில பெரிய உத்தியோகத்தில இருந்தவர், அவருக்கும் இது வந்தது.

மச்சான்  இது வெளியே வாறது, பிள்ளை பெறுவதைப் போன்றது - அவ்வளவு வேதனையாக இருக்கும், என்று லசந்த சொல்லி முடிக்கவும் அவன் செல்போன் சிணுங்கவும் சரியாயிருந்தது. கதைத்து முடித்ததும் சந்தோசமாய் தனது வேலை உறுதி செய்யப்பட்டதாய் சொன்னான்.

எல்லாம் கல் வந்த ராசி தான், உன் மோதிரத்தில் பதித்துக்கொள் இன்னம் சிறப்பாய் இருக்கும் என்று சொன்னேன். அப்படியா..? என்றானே ஆயிரம் வோல்ட் பல்ப்போடு.

Wednesday, October 20, 2010

ஆதி - கோடி கோடியாய், முடிவில்லாமல்

எனக்கு அதை சொல்லத் தெரியவில்லை.

மல்லிகை, முல்லை, அல்லி …. என வெவ்வேறு பூக்களாய்ப் பூத்ததாக தெரியவில்லை. அத்தனையும் தாமரையாய் இருந்தன.

பூத்தன பூத்தன புவனம் பதின்நான்கயும் தாண்டிப் பூத்தன. முதலில் ஆயிரம் கோடி பூத்தன, பின்னர் கோடியின் கோடியாய் பூத்தன. முடிவில்லாமல் பூத்தன, முடிவிலியிலும் பூத்தன.


Thursday, September 30, 2010

முத்தம் - என் கன்னத்தில் எச்சில்த்துளி

பவளவாய் இருந்து பற்றறுத்துத் தெறித்த எச்சில்த்துளி என் கன்னத்தில் இன்னமும் ஈரமாய். பச்சையாய் இருக்கிறது என் நினைவுகளில் அந்த முத்தம். அவன் ஸ்பரிசம், குறைந்தது பார்வையாயினும் கிடைக்காதா என ஏங்கும் கோடி கோடி நெஞ்சங்களுக்கு மத்தியில், எனக்கு முத்தமே கிடைத்திருக்கும் பட்சத்தில் - வேறென்ன மொத்தமாய் அடைந்தேன் மோட்ஷம்.

ஆடை உடுத்திருந்தானா? அரைநாணாவது கட்டியிருந்தானா?


இன்னும்