Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, March 4, 2019

வீரமணி ஐயர்


அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை இருந்தது. அவரின் சொல், இசை ஆளுமை பற்றி பலமுறை அப்பா சொல்லி இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் யார் என்று எனக்குத் தொியாது.

அது 80களின் இறுதியாக இருக்க வேண்டும், என் சங்கீத ஆசிரியையின் வற்புறுத்தலின் பேரில் “பாரதி கான சபா” சென்றிருந்தேன். இவா் வரக்கூடும்.

ஆண்டு விழா. சபா மண்டபம் நிறைய ஆட்கள். நடுவில் சரஸ்வதி, கொஞ்சம் இடம், பிறகு முரளியும் நானும்.

இவர் வரும்வரைக்கும் கீர்த்தனைகள் தான். கொஞ்சம் பிந்தித்தான் வந்தார் என்று நினைக்கிறேன். கடகடவென உள்ளே வந்தவர் எனதருகில் உட்கார, எனதும் அவரதும் முழங்கால்கள் முட்டிக் கொண்டன. ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். அசீவாதமாக கூட இருக்கலாம்.

சபாவிற்காக பாடல் இயற்றக் கேட்டுக் கொண்டார்கள். அங்கு ஆரம்பித்தது வித்தை. சரஸ்வதி நாக்கில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நேராகப் பார்த்தேன். அப்படி ஒரு பிரவாகம் - சொல்லிலும் சரி மெட்டிலும் சரி. ஒன்றுக்கு நான்கு கீர்த்தனைகளை கொட்டினார். பக்கத்திலிருந்த சபாக்காறர் எழுத திணறினார்.

வேலை முடிந்தது வாழ்த்தினர் வணக்க்கினர் விடைபெற்றார்.

கலை சிலருக்கு வரம், அச்சிலர் சமூகத்தின் வரம்.

குக்கூ வின் இந்த இசை ஆவணத்தை headphone இல் இறுதிவரை கேட்கவும்.. it will transport you.


Thursday, May 10, 2012

மோத்திரக் கல்


‘ஒரு மாதிரியாக வெளியில வந்திற்று’

பத்து மாதம் பக்குவமாய் சுமந்து பெற்றதைப் போல பூரிப்புடன் வாசலில் நின்று கொண்டிருந்த லசந்தவின் கையில் சிறிய காகிதத் துண்டின் மேல் இருந்தது அது.

டேவிட் அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, நான் ஏனோ நானாகவே மூக்கை நுழைத்துக் கொண்டேன்.

‘என்ன இது’ - நான்

”Calcium Oxalate - கல்சியம் ஒக்ஸ்சலேட் - நீர் ஏஎல்ல என்ன பாடம் செய்த நீர்? நான் பயோ, சோலஜி B மற்ற தெல்லாம் S. பிறகு தான் ITக்கு வந்தனான். விளங்கிற மாதிரி சொன்னா - மூத்திரக் கல்.”

மூக்கை நுழைத்ததற்கு வருந்திக் கொண்டாலும், முகர்ந்து பார்க்காததற்கு மகிழ்ந்து கொண்டேன்.

சரி எப்படிக் கண்டு பிடித்தாய்?

நிண்டு கொண்டு ‘இருக்கேக்க’ - உள்ளுக்குள்ள இருந்து கல்லு வெளியில வரும் உணர்வு தெரியும் - டக்கெண்டு கைதுடைக்கிற பேப்பற போட்டு..

"அட நான் அதைக் கேட்கவில்லை, இது மூத்திரக் கல் தான் என எப்படித் தெரியும்?"

'இது நாலாவது முறை மச்சான் (சிங்களவருக்கும் நமீதாவிற்கும் முதலில் தெரியும் தமில் சொல் மச்சான் தான்) போன முறை கலியான வீட்டுக்கு நாலு நாளைக்கு முதல் வந்தது, 0.6 mm . இது இன்னமும் பெரிசு போல' என்றான் லசந்த கல்லை உற்றுப் பார்த்தவாறே.

நல்ல வேளை, அது முன்னதாகவே வெளியேறி விட்டது. இல்லாட்டி நங்கி பாவம் என நான் நினைத்துக் கொண்டேன்.

தண்ணி நிறையக் குடிக்கோணும்.. அதுதான் இதுக்கு நல்ல மருந்து. அப்பா ஆமில பெரிய உத்தியோகத்தில இருந்தவர், அவருக்கும் இது வந்தது.

மச்சான்  இது வெளியே வாறது, பிள்ளை பெறுவதைப் போன்றது - அவ்வளவு வேதனையாக இருக்கும், என்று லசந்த சொல்லி முடிக்கவும் அவன் செல்போன் சிணுங்கவும் சரியாயிருந்தது. கதைத்து முடித்ததும் சந்தோசமாய் தனது வேலை உறுதி செய்யப்பட்டதாய் சொன்னான்.

எல்லாம் கல் வந்த ராசி தான், உன் மோதிரத்தில் பதித்துக்கொள் இன்னம் சிறப்பாய் இருக்கும் என்று சொன்னேன். அப்படியா..? என்றானே ஆயிரம் வோல்ட் பல்ப்போடு.

Thursday, January 26, 2012

இஸ்லாமிய பெண்களின் முகத்திரைகள்

இப் பதிவு இஸ்லாமிய பெண்கள் ஏன் முகத்திரை அணிய வேண்டும் அல்லது ஏன் அணியக்கூடாது என்பது பற்றி அல்ல. அல்லது அவர்களின் முகத்திரை பற்றிய என் பார்வையும் அல்ல.

இஸ்லாமிய பெண்களின் முகத்திரைகள்

பொதுவாக மலேசியாவில் தலையை மட்டும் முடியவாறு தான் பெண்களைக் காணலாம். இத்தனைக்கும் மலேசியா முழுமையான இஸ்லாமிய நாடு. முகத்திரை அணிந்த இஸ்லாமிய பெண்களை நான் காணவே இல்லை எனலாம். ”அக்கா” என்றழைக்க எல்லோருமே பண்பாய் பழகுவார்கள். அக்கா, மலாய் மொழியில் சகோதரி என்று மட்டுமல்லாது பொதுவாக பெண்களைக்கும் சொல் - தோழி என்று வைத்துக் கொள்ளலாம்.


Wednesday, October 20, 2010

ஆதி - கோடி கோடியாய், முடிவில்லாமல்

எனக்கு அதை சொல்லத் தெரியவில்லை.

மல்லிகை, முல்லை, அல்லி …. என வெவ்வேறு பூக்களாய்ப் பூத்ததாக தெரியவில்லை. அத்தனையும் தாமரையாய் இருந்தன.

பூத்தன பூத்தன புவனம் பதின்நான்கயும் தாண்டிப் பூத்தன. முதலில் ஆயிரம் கோடி பூத்தன, பின்னர் கோடியின் கோடியாய் பூத்தன. முடிவில்லாமல் பூத்தன, முடிவிலியிலும் பூத்தன.


Thursday, September 30, 2010

முத்தம் - என் கன்னத்தில் எச்சில்த்துளி

பவளவாய் இருந்து பற்றறுத்துத் தெறித்த எச்சில்த்துளி என் கன்னத்தில் இன்னமும் ஈரமாய். பச்சையாய் இருக்கிறது என் நினைவுகளில் அந்த முத்தம். அவன் ஸ்பரிசம், குறைந்தது பார்வையாயினும் கிடைக்காதா என ஏங்கும் கோடி கோடி நெஞ்சங்களுக்கு மத்தியில், எனக்கு முத்தமே கிடைத்திருக்கும் பட்சத்தில் - வேறென்ன மொத்தமாய் அடைந்தேன் மோட்ஷம்.

ஆடை உடுத்திருந்தானா? அரைநாணாவது கட்டியிருந்தானா?


இன்னும்