Showing posts with label பார்த்தேன். Show all posts
Showing posts with label பார்த்தேன். Show all posts

Monday, March 4, 2019

வீரமணி ஐயர்


அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை இருந்தது. அவரின் சொல், இசை ஆளுமை பற்றி பலமுறை அப்பா சொல்லி இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் யார் என்று எனக்குத் தொியாது.

அது 80களின் இறுதியாக இருக்க வேண்டும், என் சங்கீத ஆசிரியையின் வற்புறுத்தலின் பேரில் “பாரதி கான சபா” சென்றிருந்தேன். இவா் வரக்கூடும்.

ஆண்டு விழா. சபா மண்டபம் நிறைய ஆட்கள். நடுவில் சரஸ்வதி, கொஞ்சம் இடம், பிறகு முரளியும் நானும்.

இவர் வரும்வரைக்கும் கீர்த்தனைகள் தான். கொஞ்சம் பிந்தித்தான் வந்தார் என்று நினைக்கிறேன். கடகடவென உள்ளே வந்தவர் எனதருகில் உட்கார, எனதும் அவரதும் முழங்கால்கள் முட்டிக் கொண்டன. ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். அசீவாதமாக கூட இருக்கலாம்.

சபாவிற்காக பாடல் இயற்றக் கேட்டுக் கொண்டார்கள். அங்கு ஆரம்பித்தது வித்தை. சரஸ்வதி நாக்கில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நேராகப் பார்த்தேன். அப்படி ஒரு பிரவாகம் - சொல்லிலும் சரி மெட்டிலும் சரி. ஒன்றுக்கு நான்கு கீர்த்தனைகளை கொட்டினார். பக்கத்திலிருந்த சபாக்காறர் எழுத திணறினார்.

வேலை முடிந்தது வாழ்த்தினர் வணக்க்கினர் விடைபெற்றார்.

கலை சிலருக்கு வரம், அச்சிலர் சமூகத்தின் வரம்.

குக்கூ வின் இந்த இசை ஆவணத்தை headphone இல் இறுதிவரை கேட்கவும்.. it will transport you.


Wednesday, February 20, 2013

விஸ்வரூபம் கார் விபத்து


விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று.

பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர் ஒழுக்கு இருக்கும்.

Friday, December 7, 2012

பொய்க்கால்

பள்ளிக்கூடத்தில் பம்பலாக பார்த்தவை தவிர்த்து, நான் முதன் முதலில் பார்த்த மேடை நாடகம் அதுதான். முகத்திலடிக்கும் உண்மையையும் அடக்கமுடியாதபடி சிரிப்பையும், திரு மருகையன் அவர்கள் எழுதி திரு சிதம்பரநாதன் அவர்கள் இயக்கிய அந்த நாடகம் தந்தது.

ஊர் பெரியவரான பொய்க்கால் தாத்தா, அவர் அணிந்திருக்கும் உயரமான பொய்க்கால், சின்னராசு, சின்னராசை லவ் பண்ணும் பெண், கூடத்திரியிற பெடியள் எண்டு ஒவ்வொரு பாத்திரத்திலும் உயிர். கண்ணன் மாஸ்டரிண்ட இசையில் பாட்டுகளுக்கு அவை ஆடின ஆட்டமும் அட்டகாசம். அந்த நாட்களின் குண்டு வீச்சுக்களுக்குள்ளயும், அட இப்பிடி ஒர் உலகம் இருக்கு எனக்கு புரிய வைத்ததும், என்னை மிகவும் பாதித்த முதல் மேடை நாடகமும் "பொய்க்கால்" தான்.

பொய்க்கால் தாத்தாவின் அறிமுகமே தனி, சின்னராசுவின் நளினங்களில் நாங்கள் லயித்திருக்கும் போது குமாரசாமி மண்டபத்தில் பார்வையாளர்களின் பின்னால் இருந்து வந்து நாடகத்துள் நுழைந்து கொண்டார். ”என்ன சின்னராசு, பாட்டெல்லாம் பாடுறியாம், ஆட்டங்கள் போடுறியாம்” என்றவுடன் டான்ஸ் எல்லாம் நிண்டுபோச்சு. இதுதான் கதையின் பொய்க்கால் எண்டு - எல்லாம் விளங்கின மாதிரி - வழமை போல - நானும் நினைத்தேன். ஆனால் அதுவல்ல கரு. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் உள்ளுரில் விலாசம் காட்டுபவர்களின் கால்தான் - பொய்க்காலின் கரு.

இதற்குள் சின்னராசு + நண்பர்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிவப்புத் துணியை காப்பாற்ற அதை இழுக்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் விட்டு விட்டு போக, சின்னராசு தனித்து நிற்கிறான் - இழுக்கிறான். புரிய வேண்டியவர்கள் சிவப்புத் துணியை புரிந்து கொள்ளுங்கள்.

ஊரின் உண்மைகளை அட்டகாசமான திரைக்கதையோடு இருக்கிற வளங்களை வைத்துக் கொண்டு நடித்துக் காட்டினார்கள் - நடந்து காட்டினார்கள் பொய்க்காலில்.

Monday, May 7, 2012

பறகா




பிறேசில் பழங்குடி சிறுமி ஒருத்தி இலைகளை விலக்கிக் கொண்டு செடி கொடிகளினுடே எட்டிப் பார்க்கிறாள். இப்படியான அட்டைப் படத்தோடு தான் முதன்முதலில் நான் பறகாவை கவனித்தேன். இது ஓர் தென்னமெரிக்க காட்டுவாசிகளின் கதையாக இருக்கக் கூடும் என எண்ணியவாறு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

யப்பானில் குரங்குகள் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருக்கின்றன. சீன சனநெரிசல்களில் அதிவேக ரயில்கள் சிக்கித் தவிக்கின்றன. நியுயோர்க் பாதை விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, மக்காவின் கோபுரங்கள் வெளிச்சக்கீற்று தாக்கி அழகொழுகிக் கொண்டிருந்தன.

Sunday, May 22, 2011

நீங்கள் சூசன்னாவை காதலிப்பீர்கள்

சூசன்னாவும் ஏழு கணவர்களும் - 7 Khoon Maaf

ரஸ்கின் பாண்டின் ”சூசான்னாவின் ஏழு கணவர்கள்” என்கிற சிறுகதையை திரைப்படம் ஆக்கியிருக்கிறார் விஷால் பரத்வாஜி.
சூசன்னா ஒரு பேரழகி, பணக்காரி. இந்த கதை சூசன்னாவிடம் வேலை செய்து கொண்டு, அவளின் ஆதரவில் படித்து டாக்டராகும் விவான் ஷாவின் பார்வையில் சொல்லப்படுகிறது.


Thursday, February 17, 2011

ஓர் கறுப்பு அன்னத்தின் கனவு

நட்டலி போட்மன்


“பாலே” நடனத்தையே கனவாய் நினைவாய் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் லீனாவை புதிய சுவான் குயினாக தெரிவு செய்து கொண்டு நாட்டிய நாடகத்தை (Version 2.0) அரங்கேற்றுகிறார் தோமஸ் லிறோய் Thomas Leroy (Vincent Cassel). லீனா ஆக நடிக்கிறார் நட்டலி போட்மன்.


Monday, February 7, 2011

Dhobi Ghat - மும்பை நாட்குறிப்புகள்

நடிகா் அமீர்கான் தயாரிப்பில், கிரண் ராஒ (Mrs Amir) இயக்க அமீர்கான் (அருண்), மோனிகா டொக்ரா (சாய்), ப்ரட்டீக் பப்பர் (முன்னா), கீர்த்தி மல்கோத்ரா (யாஸ்மின்) முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் DHOBI GHAT (அது சலவைத் தொழில் செய்யும் இடத்தைக் குறிக்கும் என்று நினைக்கின்றேன்)

மும்பையில் வெவ்வேறு துறைகளில் தரங்களில் இயங்கும் நான்கு மனிதா்களில் வாழ்கையைப் பேசுகிறது படம்.


இன்னும்