Showing posts with label ரசித்தேன். Show all posts
Showing posts with label ரசித்தேன். Show all posts

Monday, March 4, 2019

வீரமணி ஐயர்


அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை இருந்தது. அவரின் சொல், இசை ஆளுமை பற்றி பலமுறை அப்பா சொல்லி இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் யார் என்று எனக்குத் தொியாது.

அது 80களின் இறுதியாக இருக்க வேண்டும், என் சங்கீத ஆசிரியையின் வற்புறுத்தலின் பேரில் “பாரதி கான சபா” சென்றிருந்தேன். இவா் வரக்கூடும்.

ஆண்டு விழா. சபா மண்டபம் நிறைய ஆட்கள். நடுவில் சரஸ்வதி, கொஞ்சம் இடம், பிறகு முரளியும் நானும்.

இவர் வரும்வரைக்கும் கீர்த்தனைகள் தான். கொஞ்சம் பிந்தித்தான் வந்தார் என்று நினைக்கிறேன். கடகடவென உள்ளே வந்தவர் எனதருகில் உட்கார, எனதும் அவரதும் முழங்கால்கள் முட்டிக் கொண்டன. ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். அசீவாதமாக கூட இருக்கலாம்.

சபாவிற்காக பாடல் இயற்றக் கேட்டுக் கொண்டார்கள். அங்கு ஆரம்பித்தது வித்தை. சரஸ்வதி நாக்கில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நேராகப் பார்த்தேன். அப்படி ஒரு பிரவாகம் - சொல்லிலும் சரி மெட்டிலும் சரி. ஒன்றுக்கு நான்கு கீர்த்தனைகளை கொட்டினார். பக்கத்திலிருந்த சபாக்காறர் எழுத திணறினார்.

வேலை முடிந்தது வாழ்த்தினர் வணக்க்கினர் விடைபெற்றார்.

கலை சிலருக்கு வரம், அச்சிலர் சமூகத்தின் வரம்.

குக்கூ வின் இந்த இசை ஆவணத்தை headphone இல் இறுதிவரை கேட்கவும்.. it will transport you.


Wednesday, February 20, 2013

விஸ்வரூபம் கார் விபத்து


விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று.

பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர் ஒழுக்கு இருக்கும்.

Friday, December 7, 2012

பொய்க்கால்

பள்ளிக்கூடத்தில் பம்பலாக பார்த்தவை தவிர்த்து, நான் முதன் முதலில் பார்த்த மேடை நாடகம் அதுதான். முகத்திலடிக்கும் உண்மையையும் அடக்கமுடியாதபடி சிரிப்பையும், திரு மருகையன் அவர்கள் எழுதி திரு சிதம்பரநாதன் அவர்கள் இயக்கிய அந்த நாடகம் தந்தது.

ஊர் பெரியவரான பொய்க்கால் தாத்தா, அவர் அணிந்திருக்கும் உயரமான பொய்க்கால், சின்னராசு, சின்னராசை லவ் பண்ணும் பெண், கூடத்திரியிற பெடியள் எண்டு ஒவ்வொரு பாத்திரத்திலும் உயிர். கண்ணன் மாஸ்டரிண்ட இசையில் பாட்டுகளுக்கு அவை ஆடின ஆட்டமும் அட்டகாசம். அந்த நாட்களின் குண்டு வீச்சுக்களுக்குள்ளயும், அட இப்பிடி ஒர் உலகம் இருக்கு எனக்கு புரிய வைத்ததும், என்னை மிகவும் பாதித்த முதல் மேடை நாடகமும் "பொய்க்கால்" தான்.

பொய்க்கால் தாத்தாவின் அறிமுகமே தனி, சின்னராசுவின் நளினங்களில் நாங்கள் லயித்திருக்கும் போது குமாரசாமி மண்டபத்தில் பார்வையாளர்களின் பின்னால் இருந்து வந்து நாடகத்துள் நுழைந்து கொண்டார். ”என்ன சின்னராசு, பாட்டெல்லாம் பாடுறியாம், ஆட்டங்கள் போடுறியாம்” என்றவுடன் டான்ஸ் எல்லாம் நிண்டுபோச்சு. இதுதான் கதையின் பொய்க்கால் எண்டு - எல்லாம் விளங்கின மாதிரி - வழமை போல - நானும் நினைத்தேன். ஆனால் அதுவல்ல கரு. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் உள்ளுரில் விலாசம் காட்டுபவர்களின் கால்தான் - பொய்க்காலின் கரு.

இதற்குள் சின்னராசு + நண்பர்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிவப்புத் துணியை காப்பாற்ற அதை இழுக்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் விட்டு விட்டு போக, சின்னராசு தனித்து நிற்கிறான் - இழுக்கிறான். புரிய வேண்டியவர்கள் சிவப்புத் துணியை புரிந்து கொள்ளுங்கள்.

ஊரின் உண்மைகளை அட்டகாசமான திரைக்கதையோடு இருக்கிற வளங்களை வைத்துக் கொண்டு நடித்துக் காட்டினார்கள் - நடந்து காட்டினார்கள் பொய்க்காலில்.

Tuesday, October 23, 2012

என் கண்மணித்தாமரை

மீனா அல்லது ரம்யா கிருஷ்ணன் காதிலிருந்து, மெல்ல நழுவி மெதுவாய் கன்னத்தை உரசியபடி கிழே விழுந்து, இரண்டோ மூன்றோ முறை எகிறிக் குதித்து, விறு விறுவென வாசலை நோக்கி ஓடி வெளியே வந்து, ஒரே பாய்ச்சலாய் விண்ணுக்கு பாய்ந்து, அங்கும் சில-பல குட்டிக் கரணங்கள் அடித்த பின் நட்ட நடுவானில் ஒளி உமிழ்வதெல்லாம் கிறபிக்ஸ் “தோடு“ தான்.

இதற்கிடையில் குளோசப்பில் கண்களாலும் உதடுகளாலும் அம்மன் குறைந்தது மூன்று முறையாவது சிரித்திருப்பார், படத்திலுள்ள பக்தர்களேடு நாமும் பரவசப்படும்படியாக காட்சி முழக்கப்படும். இது 3D இல் வந்தால் இன்னும் விஷேசம்.

ஆனால் நிஜத்தில் அப்படியா இருக்கும்?

அம்மன்

"கிட்டத்தட்ட ஒன்பதாவது பாட்டு முடிகின்ற நேரம் சட்டென ஓர் மின்னல் கீற்று மூலஸ்தானத்திற்குப் பக்கமாய் பளிச்சிட்டதை, அம்மாவின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்த அபிநயா, கிழே எரிந்து கொண்டிருந்த நெருப்பு, ஓடி விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியையும் சேர்த்து வந்திருந்த எல்லா ஏழை - பணக்காரரும் பார்த்தார்கள், இல்லை உணர்ந்தார்கள் என்பதே சரியாய் இருக்கும்.

என்ன அது என்று சுதாரித்துக் கொள்வதற்குள்; பின் வானில் அத்தனை வெளிச்சம், ஒரு UFO.
இல்லை நிலா,
நிலாவே தான்.

அந்த அடர்ந்த அமாவாசையில் ஓர் பௌர்ணமி நிலா.

அம்மனைப் போய் கிட்டப் பார்த்தால் தோட்டைக் காணோம்"


கிட்டத்தட்ட இப்படித்தான் “என் கண்மணித்தாமரை“ கதையும் முடிகிறது.

என் கண்மணி தாமரை
என் கண்மணி தாமரை

பிறகு ஒரு பின் குறிப்பு - பின் நாட்களில் so-and-so பலராலும் ”அபிராமிப்பட்டர்” என்று அழைக்கப்பட்டார்.

ஆக, கதை சொல்லும் பாங்கால் “என் கண்மணித்தாமரை“ யும் நான் பாலகுமாரனை ரசிப்பதற்கு மேலும் ஒரு காரணமாகிறது.

Thursday, May 17, 2012

எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு

உலகில் பரவலாக பேசப்படும் மொழியை நாம் இலகுவில் கற்றுக் கொள்கிறேம். தமிழில் தான் நீங்கள் கதைக்க வேண்டும் என்றால் யாரும் கதைக்கப் போவதில்லை. ஆங்கில மோகம் என்கிறார்கள்,
உண்மையில் இது அமேரிக்க மோகம்.

மொழி ஒரு கருவி அவ்வளவதான். எல்லோருக்கும் அவரவர் தாய் மொழிதான் முதல் மொழி, அதன் பிறகுதான் மற்றயவை.

“காதல்“ எங்கிறதை என்னமோ கெட்ட வார்த்தைன்னு ஆக்கீட்டாங்க
I love you ன்னு தான் சொல்றாங்க,  எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு. - கமல் 




Monday, May 7, 2012

பறகா




பிறேசில் பழங்குடி சிறுமி ஒருத்தி இலைகளை விலக்கிக் கொண்டு செடி கொடிகளினுடே எட்டிப் பார்க்கிறாள். இப்படியான அட்டைப் படத்தோடு தான் முதன்முதலில் நான் பறகாவை கவனித்தேன். இது ஓர் தென்னமெரிக்க காட்டுவாசிகளின் கதையாக இருக்கக் கூடும் என எண்ணியவாறு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

யப்பானில் குரங்குகள் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருக்கின்றன. சீன சனநெரிசல்களில் அதிவேக ரயில்கள் சிக்கித் தவிக்கின்றன. நியுயோர்க் பாதை விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, மக்காவின் கோபுரங்கள் வெளிச்சக்கீற்று தாக்கி அழகொழுகிக் கொண்டிருந்தன.

Monday, January 2, 2012

காதலை சொல்வதற்கு ஆயிரம் வழி - 001

வானைத் தொடுமளவிற்கு காதல் இருக்கும்.
எகிறி குதித்தால் வானம் இடிக்கும்.
இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்
காதலை சொல்வதற்கு ஆயிரம் வழியும் இருக்கும். .

முதன் முதலாய் அவன் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன்.

இது ஆண்டின் முதல் நாள்
அது விமானிக்கு முழு நாள்

சிட்னி வானில்
சிட்டாய் பறந்தது
சிறிய விமானம்

சிட்டுக் குருவியாய்
வட்டமிட்டு விரைந்து
கீறியது வானில்

எலீனா, என்னோடு இரு 




யார் அந்த லுசுப் பெண் - எலீனா..


Sunday, May 22, 2011

நீங்கள் சூசன்னாவை காதலிப்பீர்கள்

சூசன்னாவும் ஏழு கணவர்களும் - 7 Khoon Maaf

ரஸ்கின் பாண்டின் ”சூசான்னாவின் ஏழு கணவர்கள்” என்கிற சிறுகதையை திரைப்படம் ஆக்கியிருக்கிறார் விஷால் பரத்வாஜி.
சூசன்னா ஒரு பேரழகி, பணக்காரி. இந்த கதை சூசன்னாவிடம் வேலை செய்து கொண்டு, அவளின் ஆதரவில் படித்து டாக்டராகும் விவான் ஷாவின் பார்வையில் சொல்லப்படுகிறது.


Thursday, February 17, 2011

ஓர் கறுப்பு அன்னத்தின் கனவு

நட்டலி போட்மன்


“பாலே” நடனத்தையே கனவாய் நினைவாய் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் லீனாவை புதிய சுவான் குயினாக தெரிவு செய்து கொண்டு நாட்டிய நாடகத்தை (Version 2.0) அரங்கேற்றுகிறார் தோமஸ் லிறோய் Thomas Leroy (Vincent Cassel). லீனா ஆக நடிக்கிறார் நட்டலி போட்மன்.


இன்னும்